முல்லைத்தீவில் நில அளவீட்டிற்கு மக்கள் எதிர்ப்பு

முல்லைத்தீவில் இராணுவ முகாம் அமைக்க நில அளவீடு: மக்கள் கடும் எதிர்ப்பு

by Staff Writer 10-01-2019 | 7:59 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில் இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கு நில அளவீடு செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் உள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணி அளவீடு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அளம்பில் சந்தியில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினார். மக்களின் எதிர்ப்பை அடுத்து நில அளவீட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.