by Staff Writer 10-01-2019 | 7:08 AM
Colombo (News 1st) எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெலியத்த - கெடமான்ன பகுதியில் அதிவேக மார்க்கத்தில் கடமையாற்றி வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இனங்காணப்பட்டுள்ளார்.
எரிவாயு சிலிண்டரை வெட்ட முயற்சித்த வேளையில் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளதாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் தங்காலை - தோர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் நுவரெலியா - ராகலை பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.