மேல் மாகாண ஆளுநராக அசாத் சாலி கடமையேற்றார்

by Staff Writer 09-01-2019 | 8:43 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்திற்கான புதிய ஆளுநர் அசாத் சாலி இன்று முற்பகல் தமது கடமைகளை ஆரம்பித்தார். சர்வமத அனுஷ்டானங்களை அடுத்து மேல் மாகாணத்தின் 8 ஆவது ஆளுநராக அசாத் சாலி இன்று கடமைகளை ஆரம்பித்தார். கடந்த ஜனவரி 4 ஆம் திகதி வரை கொழும்பு நகர சபை உறுப்பினராக பதவி வகித்த அசாத் சாலி, மாகாண சபையிலும் அனுபவம் கொண்ட அரசியல்வாதியாவார். கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராகவும் பதில் மேயராகவும் செயற்பட்டிருந்த அவர், மத்திய மாகாண சபையின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். புதிய ஆளுநர் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.