இடைக்கால அறிக்கை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பு

பாராளுமன்ற மோதல்: செயற்குழுவின் இடைக்கால அறிக்கை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பு

by Staff Writer 09-01-2019 | 1:17 PM
Colombo (News 1st) பாராளுமன்ற சபையில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட மோதல் நிலை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட செயற்குழுவின் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. செயற்குழுவின் இடைக்கால அறிக்கை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, அதன் தலைவர் ஆனந்த குலரத்ன தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று சபாநாயகரினால் குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.