தமிழகத்தின் 33ஆவது புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி

தமிழகத்தின் 33ஆவது புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயம்

by Staff Writer 09-01-2019 | 1:13 PM
தமிழகத்தின் 33ஆவது புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமாகியுள்ளது. தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தின் கீழ் உள்ள கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய நகரங்களைச் சேர்ந்த மக்கள் தமது அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுக்கவும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதால், குறித்த நகரங்களை இணைத்து புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. கடந்த 15 ஆண்டுகளாக புதிய மாவட்டக் ​கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிச்சாமி, கள்ளக்குறிச்சியை புதிய மாவட்டமாக அறிவித்துள்ளார். குறித்த அறிவிப்பினை பிரதேசவாசிகள் வரவேற்றுள்ளனர்.