எயிட்ஸ் நோயாளர்களைக் குறைக்க விசேட வேலைத்திட்டம்

எயிட்ஸ் நோயாளர்களைக் குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

by Staff Writer 09-01-2019 | 1:45 PM
Colombo (News 1st) எயிட்ஸ் நோயாளர்களைக் குறைப்பதற்காக விசேட ​வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. நோயாளர்களை அடையாளம் காண்பதற்காக நாடளாவிய ரீதியில் குருதிப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜீ. வீரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டு வரை நாட்டில் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான 318 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, 2017 இல் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான 285 பேர் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.