சாவகச்சேரி உணவு விடுதியொன்றில் கொள்ளை

சாவகச்சேரி உணவு விடுதியொன்றில் கொள்ளை

by Staff Writer 09-01-2019 | 3:25 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் உணவு விடுதியொன்றை உடைத்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பணமும் பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன. சாவகச்சேரி நகரில் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள உணவு விடுதியிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளது. உணவு விடுதியின் மேற்கூரையை பிரித்து CCTV கெமரா இணைப்புகளை துண்டித்து விட்டு உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம் மற்றும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.