இந்த வருட வரவுசெலவுதிட்ட சட்டமூலத்திற்கு அனுமதி

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுதிட்ட சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

by Staff Writer 08-01-2019 | 1:14 PM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த மதிப்பீட்டு செலவு 4,770 பில்லியன் ரூபா என, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த வருடத்திற்கான வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறை மொத்த தேசிய உற்பத்தியில் 4.8 வீதமாக அமையவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவிக்கின்றது. இந்த வருடத்தில் அரச வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் 15 வீதமாக அதிகரிப்படும் என அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் கடன்களை செலுத்துவதற்காக இந்த வருடம் வரவுசெலவுத் திட்டத்தில் 2,200 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் வரலாற்றில் அரசாங்கத்தினால் கடன்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ள பாரிய தொகை இதுவென நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வருடத்திற்கான வரவுசெலவுத் திட்டம், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.