ஷாந்தபண்டார பாராளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம்

ஷாந்த பண்டார பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

by Staff Writer 08-01-2019 | 2:15 PM
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக ஷாந்த பண்டார, பிரதி சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றதன் பின்னர், ஏற்பட்ட வெற்றிடத்தை அடுத்து, ஷாந்த பண்டார பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவை புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். பாராளுமன்றம் இன்று கூடியபோது பிரதி சபாநாயகர் இந்த விடயத்தை சபையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது.