நல்லாட்சிக்கு இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தி

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தி

by Staff Writer 08-01-2019 | 7:47 AM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. 4 வருட பூர்த்தியை முன்னிட்டு, இன்று லக்கல புதிய நகர் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. அனைத்து வசதிகளும் உள்ளடங்கிய வகையில் லக்கல நகர் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சரத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். இந்த நகரில் 26 அரச நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக 112 கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அத்துடன், சுகாதார நிலையங்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள், தபால் நிலையம் உள்ளிட்டவையும் இங்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக, சரத் சந்திரசிறி மேலும் தெரிவித்துள்ளார்.