வட மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில் விக்னேஸ்வரன்

தமிழர் ஒருவர் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது: சி.வி. விக்னேஸ்வரன்

by Staff Writer 08-01-2019 | 10:39 PM
Colombo (News 1st) முதன்முறையாக தமிழர் ஒருவர் வட மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை வரவேற்கத்தக்க விடயம் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். முதன்முறையாக சிறந்த கல்விப் புலமையும் இனப்பிரச்சினை தொடர்பில் அரசியல் அறிவும் கொண்ட கலாநிதி சுரேன் ராகவனை நியமித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கலாநிதி சுரேன் ராகவனின் அறிவும் புலமையும் அவரை சரியான முறையில், ஜனாதிபதிக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ அன்றி மக்களுக்காக சேவை செய்வதற்கு அவரை வழிநடத்தும் என எதிர்பார்ப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு உண்மையான அக்கறை இருக்குமானால், இணைந்த வடக்கு- கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் காத்திரமான நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

ஏனைய செய்திகள்