கிணற்றில் வீழ்ந்து சிறுமி உயிரிழப்பு

கிளிநொச்சியில் கிணற்றில் வீழ்ந்து சிறுமி உயிரிழப்பு

by Staff Writer 08-01-2019 | 10:22 PM
Colombo (News 1st) கிளிநொச்சியில் 10 வயதான சிறுமி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - மலையாளபுரம் பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளச்சென்ற புவனேஸ்வரன் டிலானி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். வீட்டு முற்றத்தில் இருந்து சுமார் 20 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் இவர் வீழ்ந்துள்ளார். நேற்று மாலை 2.30 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.