களனி கங்கையிலிருந்து மோட்டார்சைக்கிள் மீட்பு

களனி கங்கையிலிருந்து மோட்டார்சைக்கிள் ஒன்று மீட்பு

by Staff Writer 08-01-2019 | 7:03 AM
Colombo (News 1st) வெல்லம்பிட்டிய - கொஹிலவத்தை பகுதியின் களனி கங்கையிலிருந்து மோட்டார்சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த மோட்டார்சைக்கிளின் அருகில் இரு தலைக்கவசங்களும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோட்டார்சைக்கிள் முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்கொட சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார்சைக்கிள் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பயணித்த பாதை சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளதாகவும் அவற்றை பெற்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். அங்கொட முற்சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞன் குற்றச்செயல்கள் பலவற்றுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் இந்த இளைஞன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரா விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.