கல்லடி பாலத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிப்பு

by Staff Writer 08-01-2019 | 8:42 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கல்லடி பாலத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிருஸ்ணப்பிள்ளை கிஷாந்தினி எனும் சிறுமி கடந்த வௌ்ளிக்கிழமை (04) மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வீழ்ந்து காணாமற்போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். 16 வயதுடைய குறித்த சிறுமி பொலிஸாரும் கடற்படையினரும் இரண்டு நாட்களாக முன்னெடுத்த தேடுதலின் பின்னர் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து, இவர் தற்கொலை செய்து கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் உறவினர்கள் நேற்று தெரிவித்தனர்.