ஹிஸ்புல்லாஹ்,சரத் ஏக்கநாயக்க பணிகளை ஆரம்பித்தனர்

ஹிஸ்புல்லாஹ் மற்றும் சரத் ஏக்கநாயக்க கடமைகளை பொறுப்பேற்றனர்

by Fazlullah Mubarak 07-01-2019 | 4:39 PM

கிழக்கு மாகாண மற்றும் வட மத்திய மாகாண ஆளுநர்கள் இன்று (07) தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ஆளுநராக தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்த நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதேவேளை, வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் தனது கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர் ஜயஶ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். சரத் ஏக்கநாயக்க இதற்கு முன்னர் 3 தடவைகள் மத்திய மாகாண முதலமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.