by Staff Writer 05-01-2019 | 3:08 PM
Colombo (News 1st) கடந்த ஆண்டில் நாட்டின் மொத்த சோள அறுவடையை 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், அது 61 வீதத்தால் அதிகரித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் சோள அறுவடை 3 இலட்சம் மெட்ரிக் தொன் எனக் கணிப்பிடப்பட்டிருந்ததாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நாட்டில் பாரிய வரட்சி நிலவியபோதிலும், சோள அறுவடை அதிகரித்திருந்ததாக விவசாய திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.