அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்ப்பு

இந்த வருடத்தில் அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்ப்பு

by Staff Writer 05-01-2019 | 3:06 PM
Colombo (News 1st) இந்த வருடத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் எதிர்பார்ப்பதாக சுற்றுலா அதிகாரசபை தெரிவித்துள்ளது. அந்தவகையில், இந்த வருடத்தில் கடந்த வருடத்தை விட 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகின்றது. நடப்பாண்டின் இறுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் 5 பில்லியன் டொலர் வருமானமும் எதிர்பார்க்கப்படுகின்றது. சுற்றுலா அதிகாரசபையின் தரவுகளுக்கு அமைய, இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.