இரத்தினபுரி மாவட்ட கித்துள் உற்பத்தி அபிவிருத்தி

இரத்தினபுரி மாவட்டத்தின் கித்துள் உற்பத்தி அபிவிருத்தி

by Staff Writer 04-01-2019 | 5:26 PM
Colombo (News 1st) கித்துள் உற்பத்தியை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், இரத்தினபுரி மாவட்டத்தின் கித்துள் உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்கு கைத்தொழில் அபிவிருத்திசபை தெரிவித்துள்ளது. கித்துள் தயாரிப்பில் ஈடுபடும் விவசாயிகளைப் பதிவுசெய்தல், கித்துள் உற்பத்தியை விஸ்தரித்தல், உற்பத்திகளை கண்காட்சிப்படுத்தல், புதிய தொழிநுட்பங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்குதல் ஆகியன இந்தத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன. இதுவரையிலும் மாவட்டத்தில் 2,500 விவசாயிகள் இதன்கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.