விமானப் படையுடன் சுகாதார அமைச்சு ஒப்பந்தம்

விமானப் படையுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம்

by Staff Writer 02-01-2019 | 3:58 PM
Colombo (News 1st) மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புக்களை, நோயாளர்களிடம் விரைவில் கொண்டுசேர்ப்பதற்கு, விமானப் படையுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் சில சோதனைகளை முன்னெடுத்த பின்னர் ஒப்பந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக, தேசிய சிறுநீரக மையத்தின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ரத்னசிறி ஹேவகே தெரிவித்துள்ளார். விமானப் படையுடன் இணைந்த திட்டத்தினூடாக நோயாளர்களுக்கான உடல் உறுப்புக்களை மிக இலகுவாகக் கொண்டுசேர்க்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.