by Staff Writer 01-01-2019 | 7:41 PM
Colombo (News 1st) தெங்கு மற்றும் றப்பர் பயிர்செய்யப்படும் இடங்களில் இடைப்பயிர்களைப் பயிரிடுவதற்கு காணியுரிமையாளர்களை ஊக்குவிக்க விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், சாகுபடி விவசாயப் பயிராக இடைப்பயிர்களை பயிரிடுவதற்கு விவசாயிகள் ஊக்குவிக்கப்படவுள்ளனர்.
சிறு, நடுத்தர மற்றும் பாரிய அளவில் தெங்கு மற்றும் றப்பர் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் விவசாயத் திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.