மாத்தறை,கந்தர பகுதியில் ஒருவர் கொலை

மாத்தறை, கந்தரவில் ஒருவர் கொலை

by Staff Writer 31-12-2018 | 3:47 PM

மாத்தறை, கந்தர பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணி தொடர்பிலான பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றதுள்ளது. கந்தர பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் உறவினராக ஜோடியே கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களான ஜோடி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் நாளை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

ஏனைய செய்திகள்