by Staff Writer 30-12-2018 | 11:51 AM
Colombo (News 1st) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், காலை மற்றும் இரவு வேளைகளில் குளிருடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாணம் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மத்திய, வட மேல், மற்றும் ஊவா மாகாணங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டத்துடனான வானிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.