சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 30-12-2018 | 5:56 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. 2018ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகின. 02. சுமார் 35,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 03. ஹற்றன் – டிக்கோயா, போடைஸ் தோட்டத்தில், 30 ஏக்கர் பிரிவிலுள்ள தொழிலாளர் குடியிருப்பில் தீ பரவியது. 04. அமைச்சுகளின் விடயப்பரப்புகள் உள்ளடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 05. அனுராதபுரம் - தலாவ, கெலேகும்புக்வெவ மக்களுக்கான குடிநீர்த் திட்டம் மக்கள் சக்திக் குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டது. வௌிநாட்டுச் செய்திகள் 01. எகிப்திய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், 40 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, அந்நாட்டு உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 02. சிரிய அரசின் ஆதரவுப் படையினர், நாட்டின் வட பகுதியில் உள்ள மன்பிஜ் நகருக்கு பிரவேசித்துள்ளன.