முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அடையாளஅட்டை

கொழும்பு மாவட்ட முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அடையாளஅட்டை

by Staff Writer 30-12-2018 | 10:53 AM
Colombo (News 1st) சுற்றுலாப் பயணிகளுக்குப் பொருத்தமான, சேவையிலீடுபடும் கொழும்பு மாவட்ட முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. "டுக்டுக்" என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 270 சாரதிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, முச்சக்கரவண்டிகளில் பயணிப்பதற்கு சுற்றுலாப்பயணிகள் பெரும் ஆர்வம் காட்டுவதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.