இந்த வருடம் சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரிப்பு

இந்த வருடம் சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரிப்பு

by Staff Writer 29-12-2018 | 5:07 PM
Colombo (News 1st) வருடத்தின் முதல் 10 மாதங்களுக்குள் சுற்றுலாத்துறை மூலம் 3,496 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்தியவங்கி தெரிவித்துள்ளது. இந்தநிலையில், 10 மாதங்களுக்குள் 20,80,627 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இது 11.2 வீத வளர்ச்சியாகும் எனவும் மத்தியவங்கி குறிப்பிட்டுள்ளது.