ரஞ்சித் சொய்சா பிணையில் விடுவிப்பு

ரஞ்சித் சொய்சா பிணையில் விடுவிப்பு

by Staff Writer 28-12-2018 | 2:37 PM
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலித்ததன் பின்னரே, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவை பிணையில் விடுவிப்பதற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கடந்த 20 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ரஞ்சித் சொய்சா உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.