புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கருகில் ஒருவர் கைது

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கருகில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

by Staff Writer 28-12-2018 | 4:37 PM
Colombo (News 1st) கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடமிருந்து 5 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மட்டக்குளி பகுதியை சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில், வாழைத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.