தெரணியகலயில் பாடசாலை அதிபர் ஒருவர் கைது

தெரணியகலயில் பாடசாலை அதிபர் ஒருவர், துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது

by Staff Writer 28-12-2018 | 5:56 PM
Colombo (News 1st) தெரணியகல பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் அதிபர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். உயர்தர வகுப்பு மாணவி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தமை தொடர்பில், அவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் கூறியுள்ளனர். சந்தேகநபரை அவிசாவளை நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்படுத்தியதை அடுத்து, ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, சம்பவம் தொடர்பில் வலயக்கல்விப் பணிமனையூடாக தனியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.