by Staff Writer 28-12-2018 | 2:27 PM
Colombo (News 1st) கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி பூஜித நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டார்.
இந்தத் தடவை 3,21,469 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.