அதிவேக நெடுஞ்சாலை மூலம் அதிக வருமானம்

அதிவேக நெடுஞ்சாலை மூலம் அதிக வருமானம்

by Staff Writer 27-12-2018 | 3:09 PM
Colombo (News 1st) நத்தார் பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் பெருந்தொகை வருமானம் கிடைத்துள்ளது. இந்த நாட்களில் நாளாந்த வருமானமாக 3 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை கிடைத்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை 3 கோடியே 20 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.