மேல் மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் கைது

மேல் மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் கைது

by Staff Writer 26-12-2018 | 10:22 PM
Colombo (News 1st) மேல் மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் இன்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 720 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை மோசடி தொடர்பிலான விசாரணைகளையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சந்தேகநபரை கல்கிஸை நீதவான் முன்னிலையில் நாளை (27) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.