500 கிராம் 'ஐஸூடன்' ஒருவர் கைது

500 கிராம் 'ஐஸூடன்' ஒருவர் கைது

by Staff Writer 25-12-2018 | 10:58 AM

500 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் பேலியகொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை பகுதியை சேர்ந்த 40 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். கார் ஒன்றில் பயணித்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளினூடக போதைப் பொருளை கொள்வனவு செய்ய தயாராக இருந்த மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடமிருந்து ஏழு கிராம் 980 மில்லிகிரம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர். பேலியகொட பகுதியில் தற்காலிகமாக வசிக்கும் 39 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு சந்தேகநபர்களையும் புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.