by Chandrasekaram Chandravadani 25-12-2018 | 9:09 AM
Colombo (News 1st) தங்காலை, குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரால் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
ரி - 56 ரக துப்பாக்கியும் கைத்துப்பாக்கியும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர்கள், தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்வபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களும் தங்காலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.