கல்தேமுல்ல கயான் இரத்மலானையில் கைது

கல்தேமுல்ல கயான் இரத்மலானையில் கைது

by Staff Writer 25-12-2018 | 4:26 PM
Colombo (News 1st) திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் கல்தேமுல்ல கயான் என்பவர், இரத்மலானையில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 5 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அங்குலான ரோஹா எனப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினரின் உதவியாளர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப்பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்