by Staff Writer 25-12-2018 | 5:04 PM
Colombo (News 1st) இந்த வருடத்தின் முதல் 11 மாத காலப்பகுதியில் 20,80,627 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக, சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்தில் மாத்திரம் 1,95,580 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தத் தொகை 16 வீத அதிகரிப்பு என்பதுடன், கடந்த மாதத்தில் இந்தியாவில் இருந்தே ஆகக் கூடுதலான சுற்றலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.