by Staff Writer 23-12-2018 | 7:52 AM
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு கூட்டம் நாளை (24) நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் காலை 8.30 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
கட்சியில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் தேர்தல் குறித்து கலந்தோலோசிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களுக்கான கூட்டமும் நாளை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த கூட்டம் நாளை காலை 9.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.
கட்சியினால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
புதிய ஏற்பாட்டாளர்களை நியமிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.