ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய கூட்டணி

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய கூட்டணி

by Staff Writer 23-12-2018 | 7:40 AM
Colombo (News 1st) ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமையிலான புதிய கூட்டணி தொடர்பில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கடந்த வௌ்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்ததாக, கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்துத் தரப்பினருடமும் கலந்துரையாடியதன் பின்னர், தேர்தல்கள் அலுவலகத்தில் கட்சியின் பெயரை பதிவுசெய்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.