சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்ப்பு

4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்ப்பு

by Staff Writer 22-12-2018 | 1:34 PM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டில் 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பதாக, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முன்னெடுக்கப்படவுள்ள உலக சுற்றுலா மேம்படுத்தல் திட்டத்தினூடாக இந்த எண்ணிக்கையை அடைய முயற்சிப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையினூடாக 5 பில்லியன் அமெரிக்க டொலர் வௌிநாட்டு நாணயமாற்றினைப் பெற முயற்சிப்பதாகவும் சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.