Colombo (News 1st) தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே நேற்று (21) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இதன்போது, நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு தோட்டத்தொழிலாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது,
வேலை செய்யும் ஒருவருக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா வழங்குவது தொடர்பில் தோட்டத்தொழிலாளர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இருக்காது என நான் எண்ணுகின்றேன். எனினும், வேலை செய்யாதவர்களுக்கும் 1000 ரூபாவை நாம் எவ்வாறு வழங்குவது என்ற பிரச்சினையே உள்ளது. அதற்கான முறையொன்றைத் தயாரித்தால், வேலை செய்பவருக்கு 1000 ரூபா அல்ல 1500 ரூபாவை வழங்க முடியும் என நான் எண்ணுகின்றேன். அந்த முறையை எதிர்காலத்தில் தயாரிக்க முடியும் என
நினைக்கின்றேன்.