மலையகத்தின் இருவேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள்

மலையகத்தின் இருவேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

by Staff Writer 22-12-2018 | 7:47 PM
Colombo (News 1st) 1000 ரூபா நாளாந்த சம்பளம் கோரி மலையகத்தின் இருவேறு பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பண்டாரவளை - கோனமுட்டாவ தோட்ட மக்கள் அடிப்படை சம்பளமாக 1000 ரூபா வழங்க வேண்டும் என கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோனமுட்டாவ தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. இதேவேளை, 1000 ரூபா சம்பள உயர்வு கோரி, லிந்துலை - ஊவாகெல தோட்ட மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கருப்புக்கொடி ஏந்திய வண்ணம், ஊவாகெல தோட்டத்தொழிற்சாலை முன்றலில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.