சக்தியின் நத்தார் வலயம் இரண்டாவது நாளாக இன்றும்

சக்தியின் நத்தார் வலயம் இரண்டாவது நாளாக இன்றும்

by Chandrasekaram Chandravadani 22-12-2018 | 12:41 PM
Colombo (News 1st) சமாதானத்தின் தூதரான இயேசு பாலனின் வருகையை கொண்டாட முழு உலகமும் தயாராகிக்கொண்டிருக்கிறது. அதனை முன்னிட்டு, கொழும்பு - 2, பிரேபுரூக் பிளேஸிலுள்ள எம்.ரி.வி., எம்.பி.சி. ஊடக வலயமைப்பின் தலைமைக் காரியாலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்படுள்ள நத்தார் வலயம், 2ஆவது நாளாக இன்றும் திறந்துவைக்கப்படவுள்ளது. பரிசுத்த பாப்பரசரினால் ஆசீர்வதிக்கப்பட்ட புனித மரியாளின் திருச்சொருபத்தைக் காணும் வாய்ப்பும் நத்தார் வலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நத்தார் அலங்காரங்கள், கெரோல் கீதங்கள், உள்ளத்தை ஈர்க்கும் நடனங்கள் ஆகியன இந்த நத்தார் வலயத்தில் உள்ளடங்குகின்றன. நத்தார் வலயத்தில் சிறுவர்களுக்கு என தனியான வலயமொன்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சக்தி நத்தார் வலயத்தில் பனிமழையில் விளையாடும் வாய்ப்பு சிறுவர்களுக்கு கிடைக்கவுள்ளது. அத்தோடு, சக்தி ரிவியின் பிரதான செய்திகள் நேரடியாக ஔிபரப்பையும் சக்தி நத்தார் வலயத்தில் நீங்கள் காணமுடியும்.