562 வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

562 வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

by Staff Writer 21-12-2018 | 3:34 PM
Colombo (News 1st) பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சிற்றுண்டிச் சாலைகளை அண்மித்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 562 வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நுகர்வுக்கு உதவாத பொருட்களுடன் நடத்திச் செல்லப்பட்ட சிற்றுண்டிச்சாலைகளை சுற்றிவளைப்பதற்கு விசேட வாரமொன்றை அமுல்படுத்தவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.