சக்தியின் நத்தார் வலயம் ஆரம்பம்

by Staff Writer 21-12-2018 | 8:46 PM
Colombo (News 1st) நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சக்தியின் நத்தார் வலயம் கொழும்பு - 2, பிரேப்ரூக் பிளேஸிலுள்ள நியூஸ்ஃபெஸ்ட்டின் தலைமையக வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சக்தியின் நத்தார் வலயம் நான்காவது தடவையாக இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தினமும் மாலை 5 மணியிலிருந்து நத்தார் வலயம் மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. பரிசுத்த பாப்பரசரினால் ஆசீர்வதிக்கப்பட்ட புனித மரியாளின் திருச்சொரூபத்தை காணும் வாய்ப்பு நத்தார் வலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்முறையும் பிரம்மாண்டமான நத்தார் மரம் சக்தி நத்தார் வலயத்தை அலங்கரிப்பதுடன், சிறுவர்களுக்காகவே பிரத்தியேகமாக பல நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், சக்தி நத்தார் வலயத்தில் பனி மழையில் விளையாடும் வாய்ப்பு சிறுவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. மயாஜால காட்சிகள், நத்தார் கரோல் கீத நிகழ்வுகள் ஆகியவற்றையும் பார்வையிட முடியும்.