அலங்கார மீன் உற்பத்தியில் ஈடுபடுவோருக்கு நிதியுதவி

அலங்கார மீன் உற்பத்தியில் ஈடுபடுவோருக்கு 5 இலட்சம் ரூபா நிதியுதவி

by Staff Writer 21-12-2018 | 3:41 PM
Colombo (News 1st) அலங்கார மீன்களை உற்பத்தி செய்யும் பிரிவொன்றை நிறுவும் திட்டமொன்றை தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்துள்ளது. கம்பஹா, கொழும்பு, களுத்துறை, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டத்தை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு குறித்த பிரிவினால் 5 இலட்சம் ரூபா நிதியுதவியை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.