ரஞ்சித் சொய்சா உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்

by Staff Writer 20-12-2018 | 5:38 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 16 ஆம் திகதி கொடக்கவெலயில் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இன்று பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஞ்சித் சொய்சா உள்ளிட்ட சந்தேகநபர்களை பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.