சபாநாயகருக்கு மஹிந்த அமரவீர கடிதம்

சபாநாயகருக்கு மஹிந்த அமரவீர கடிதம்

by Staff Writer 20-12-2018 | 11:36 AM
Colombo (News 1st) கடந்த பொதுத் தேர்தலின்போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினூடாக பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்படுவதாக, கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு 17 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினூடாக தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் தொடர்ந்தும் கூட்டமைப்பின் உறுப்பினர்களாகவே செயற்படுவதாகவும் குறித்த கடிதத்தத்தின் ஊடாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்தக் கடிதம் சபாநாயகரிடம் இன்று (20) முற்பகல் கையளிக்கப்பட்டதாகவும் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.