நாட்டை ஸ்திரமற்றதாக்க விரும்பாததால் தீர்ப்பிற்கு முன்னரே பதவி விலகினேன்: மஹிந்த ராஜபக்ஸ

by Bella Dalima 19-12-2018 | 7:49 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியைப் போன்று நாட்டை ஸ்திரமற்றதாக்க விரும்பாததால் தீர்ப்பிற்கு முன்னரே பதவி விலகியதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ அனுராதபுரம் புனித பூமிக்கு இன்று முற்பகல் சென்றிருந்த போதே இதனைக் கூறினார். அனுராதபுரத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் பல்லேகம சிறிநிவாச தேரரை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து ஜய ஸ்ரீ மகா போதிக்கு சென்ற மஹிந்த ராஜபக்ஸ அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார்.