குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 9 பேர் யாழில் கைது

வாள்வெட்டு, குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 9 பேர் யாழில் கைது

by Staff Writer 18-12-2018 | 6:02 PM
Colombo (News 1st) பல்வேறு வாள்வெட்டு மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 9 பேர் யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றத்தடுப்பு விசேட பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது 21 தொடக்கம் 24 வயதிற்குட்பட்ட 9 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 6 வாட்கள் உட்பட குற்றச்செயலுக்கு பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒரு வேனும் கைப்பற்றப்பட்டுள்ளன. மானிப்பாய் , நீர்வேலி மற்றும் யாழ். நகரை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சுன்னாகம் பொலிஸில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.