by Staff Writer 18-12-2018 | 5:13 PM
Colombo (News 1st) கண்டி நகரின் பல பகுதிகளில் நாளை காலை 7 மணி முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
நாளை மாலை 5 மணி வரை கண்டி - புலுவமுந்துன, திகன, விக்டோரியா வீதி, கோனவல வீதி, மல்பான வீதி, கேன்கல்ல, மெனிக்ஹின்ன, தம்பராவ, பிடவல, மஹவத்த, போதிகல, அமுனுகம, பன்வில ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
குண்டசாலை நீர்வழங்கல் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாகவே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.