by Staff Writer 16-12-2018 | 7:58 AM
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று 5 ஆவது தடவையாகவும் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10.30 அளவில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
அமைச்சரவை நியமனம் குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் கலந்தாலோசித்ததன் பின்னர், நாளை அல்லது நாளை மறுதினத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாக
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
பிரதமராக பதவியேற்றதன் பின்னர், ரணில் விக்ரமசிங்க, நிலவும் அரசியல் நிலைமை மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.